செய்திகள்

காஞ்சீபுரத்தில் ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு - 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2019-04-22 14:02 GMT   |   Update On 2019-04-22 14:02 GMT
காஞ்சீபுரம் அருகே நள்ளிரவில் ரவுடியை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மடம் தெருவைச் சேர்ந்தவர் தேவா (25).

காஞ்சீபுரம் பகுதிகளில் தேவா அடிக்கடி தகராறுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளது.

நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இந்திரா பெட்ரோல் பின்புறம் இவரை மர்மநபர்கள் அரிவாளால் சராமாரியாக வெட்டி தப்பி சென்று விட்டனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் ரவுடி தேவாவை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு அவருடைய நண்பர்கள் சதீஷ், துரைபாபு, பாரதி காரணமாக இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News