செய்திகள்
வேதாரண்யம் அருகே தூக்கு போட்டு பெண் தற்கொலை
வேதாரண்யம் அருகே தூக்கு போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் காவல்சரகம் மருதூர் வடக்கு ராஜாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் கத்திரிப்புலத்தை சேர்ந்த பிரியா (வயது 35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. வைத்தியநாதன் 108 ஆம்புலன்சில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டின் அருகே உள்ள மரத்தில் பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்துவருகிறார்.