செய்திகள்

பல்லாவரம் அருகே மொபட் மீது பஸ் மோதல் - பெண் பலி

Published On 2019-04-08 06:18 GMT   |   Update On 2019-04-08 06:18 GMT
பல்லாவரம் அருகே விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

வண்டலூரில் இருந்து கோயம்பேடு நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பல்லாவரம் ரேடியல் சாலையை இணைக்கும் மேம்பாலத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடிரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் பஸ்சின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குரோம்பேட்டையை சேர்ந்த பூமா(66) என்ற பெண் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பஸ் டிரைவர் பாலமுருகனை கைது செய்தனர்.

Tags:    

Similar News