செய்திகள்
8 வழி சாலையை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் 8-ந்தேதி தீர்ப்பு
சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை நாளை மறுநாள் ஐகோர்ட்டு பிறப்பிக்கிறது. #MadrasHC #ChennaiSalemExpressway
சென்னை:
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்,. சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். அதாவது இந்த வழக்கை கடந்த 8 மாதங்களாக நீதிபதிகள் விசாரித்தனர்.
பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து, கடந்த ஜனவரி 4-ந்தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர். #MadrasHC #ChennaiSalemExpressway
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, தர்மபுரி எம்.பி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்,. சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். அதாவது இந்த வழக்கை கடந்த 8 மாதங்களாக நீதிபதிகள் விசாரித்தனர்.
பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து, கடந்த ஜனவரி 4-ந்தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர். #MadrasHC #ChennaiSalemExpressway