செய்திகள்

இலங்கையில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.14 லட்சம் தங்கம் கடத்தல்

Published On 2019-04-04 09:49 GMT   |   Update On 2019-04-04 09:49 GMT
இலங்கையில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiAirport
ஆலந்தூர்:

இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த சென்னை, மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அவர்கள் இருவரும் உள்ளாடையில் மறைத்து 420 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும். இதுதொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport
Tags:    

Similar News