செய்திகள்

வடமதுரை அருகே ரூ.10 லட்சம் மோசடி செய்த பார் உரிமையாளர்

Published On 2019-03-27 12:03 GMT   |   Update On 2019-03-27 12:03 GMT
வடமதுரை அருகே ரூ.10 லட்சம் மோசடி செய்த பார் உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வடமதுரை:

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் துரை (வயது35). இவர் திருச்சி மாவட்டம் நடுப்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வடமதுரை, தென்னம்பட்டி, காணப்பாடி ஆகிய பகுதிகளில் மதுபான பார் எடுத்து நடத்தி வருகிறார்.

தொழிலை மேம்படுத்துவதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களிடம் சுமார் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். ஆனால் முறையாக திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான துரை ஊரைவிட்டு தப்பி சென்றுள்ளார். அவரது 3 பார்களும் பூட்டப்பட்டு உள்ளன. இதனால் பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News