செய்திகள்

சேத்தூர் அருகே தொழிலாளி கொடூர கொலை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2019-03-25 12:33 GMT   |   Update On 2019-03-25 12:33 GMT
தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜபாளையம்: 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள சேத்தூர் அருகே  உள்ள சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்தவர் பாட்சா என்ற மாடசாமி (வயது37). கூலி தொழிலாளியான இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் சொக்கநாதன்புத்தூர் ரோட்டில் மாடசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு காயங்கள் காணப்பட்டன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சேத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் குமரவேல், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாடசாமி இன்று அதிகாலை வெளியே செல்வதை நோட்டமிட்ட கும்பல் காத்திருந்து அவரை கொடூரமாக கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலையாளிகள் யார்?  என போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News