செய்திகள்

திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-03-24 16:31 GMT   |   Update On 2019-03-24 16:31 GMT
கோவை அருகே திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை ராக்கிப்பாளையம் அருகே உள்ள பாரதி அவன்யூவை சேர்ந்தவர் விஷ்ணுகுமார். இவரது மனைவி சோபா (வயது 33). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சோபா அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சோபாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் திருமணமான 4 மாதத்தில் சோபா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News