செய்திகள்

திருப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.14 லட்சம் கொள்ளை

Published On 2019-03-23 11:45 GMT   |   Update On 2019-03-23 11:45 GMT
திருப்பூரில் பட்டப்பகலில் ரியஸ் எஸ்டேர் அதிபர் வீட்டின் கதவை உடைத்து ரூ.14 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் 15.வேலாம்பாளையம் அண்ணாநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி சத்யசுந்தரி. இவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று கணவன்- மனைவி இருவரும் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டனர். மதியம் வேலை முடிந்த சத்யசுந்தரி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு கிடந்தது.

அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.14 லட்சம் பணம் கொள்ளைபோனது தெரியவந்தது.

இது குறித்து அவர் கணவர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்த பின்னர் போலீசில் புகார் செய்தார். 15.வேலாம்பாளையம் போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News