செய்திகள்

எடப்பாடியும், டிடிவி தினகரனும் இணைவது உறுதி- மதுரை ஆதீனம்

Published On 2019-03-21 07:10 GMT   |   Update On 2019-03-21 07:10 GMT
அ.தி.மு.கவும்., அ.ம.மு.கவும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் விரைவில் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி தினகரனும் இணைவது உறுதி என்று மதுரை ஆதீனம் தெரிவித்தார். #MaduraiAadheenam #TTVDhinakaran #ADMK
சுவாமிமலை:

பங்குனி உத்திரத்தையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திரும்புறம்பியம் சாட்சிநாதர் கோவிலில் மதுரை ஆதீனம் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி என்னை தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்தால் நான் பிரசாரம் செய்வேன். நரேந்திரமோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்.

டி.டி.வி தினகரன் பொறுமைசாலி. அமைதியானவர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கி இளைஞர் படையுடன் வலுவாக கட்சியை நடத்தி வருகிறார்.


அ.தி.மு.கவும்., அ.ம.மு.கவும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி தினகரனும் இணைவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார். #MaduraiAadheenam #TTVDhinakaran #ADMK
Tags:    

Similar News