செய்திகள்
எடப்பாடியும், டிடிவி தினகரனும் இணைவது உறுதி- மதுரை ஆதீனம்
அ.தி.மு.கவும்., அ.ம.மு.கவும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் விரைவில் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி தினகரனும் இணைவது உறுதி என்று மதுரை ஆதீனம் தெரிவித்தார். #MaduraiAadheenam #TTVDhinakaran #ADMK
சுவாமிமலை:
பங்குனி உத்திரத்தையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திரும்புறம்பியம் சாட்சிநாதர் கோவிலில் மதுரை ஆதீனம் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி என்னை தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்தால் நான் பிரசாரம் செய்வேன். நரேந்திரமோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்.
அ.தி.மு.கவும்., அ.ம.மு.கவும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி தினகரனும் இணைவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார். #MaduraiAadheenam #TTVDhinakaran #ADMK
பங்குனி உத்திரத்தையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திரும்புறம்பியம் சாட்சிநாதர் கோவிலில் மதுரை ஆதீனம் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி என்னை தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்தால் நான் பிரசாரம் செய்வேன். நரேந்திரமோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்.
டி.டி.வி தினகரன் பொறுமைசாலி. அமைதியானவர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கி இளைஞர் படையுடன் வலுவாக கட்சியை நடத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #MaduraiAadheenam #TTVDhinakaran #ADMK