செய்திகள்
இஸ்மாயில்

ஜாமீனில் விடுதலையான பயங்கரவாதி இஸ்மாயில் திண்டிவனம் போலீசில் ஆஜர்

Published On 2019-02-26 11:29 GMT   |   Update On 2019-02-26 11:29 GMT
ஜாமீனில் விடுதலையான பயங்கரவாதி இஸ்மாயில் இன்று காலை திண்டிவனம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் இஸ்மாயில். கோவையில் இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கு ஒன்றில் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததையொட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இஸ்மாயிலை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு ஷாஜகான் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இஸ்மாயிலையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் அவரை மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யும்படி இஸ்மாயில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தது. அவரை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

மறுஉத்தரவு வரும்வரை திண்டிவனம் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு இஸ்மாயில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து இன்று திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதி இஸ்மாயில் ஆஜராகி கையெழுத்திட்டார். அதன்பின்பு அவர் அங்கிருந்து வீட்டுக்கு சென்றார்.
Tags:    

Similar News