செய்திகள்

கோவில்பாளையம் அருகே கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

Published On 2019-02-26 10:14 GMT   |   Update On 2019-02-26 10:14 GMT
கோவில்பாளையம் அருகே கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

பெரம்பலூர் மாவட்டம் பெரிய அரமணையை சேர்ந்தவர் சதீஸ்குமார். கூலித் தொழிலாளி. இவரது மகன் குணால் (வயது 18). இவர் கோவை கோவில்பாளையம அருகே உள்ள ரங்கநாதர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக குணால் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

நேற்று காலை விடுதி அறையில் இருந்த குணால் திடீரென தனது லுங்கியில் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த சகமாணவர்கள் தூக்கில் இருந்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் குணால் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் குணால் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News