செய்திகள்

கோயம்பேடு அருகே ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது

Published On 2019-02-26 09:27 GMT   |   Update On 2019-02-26 09:27 GMT
கோயம்பேடு அருகே கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

போரூர்:

மாதவரம் சாத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர். ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு கோயம்பேடு நூறடி சாலையில் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் ஏறிய 3 பேர் கும்பல் விருகம்பாக்கம் செல்லுமாறு கூறினர். ஆட்டோ சிறிது தூரம் சென்றதும் திடீரென அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி குணசேகர் பையில் இருந்த ரூ.1000த்தை பறித்து 3 பேரும் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயம்பேடு மார்க்கெட்டில் பதுங்கி இருந்த திருமுல்லை வாயில் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News