செய்திகள்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி

Published On 2019-02-17 10:41 GMT   |   Update On 2019-02-17 10:41 GMT
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாமிமலை:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள காவல்கூடம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்.

இவருடைய மகன் சந்திரன்(வயது 24). அதே ஊரை சேர்ந்த ரத்தினம் மகள் ரஞ்சிதா(21). இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் தங்கள் காதலை குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் இருவரும் ஒன்று சேர்ந்து பூச்சி மருந்தை(வி‌ஷம்) குடித்தனர்.

இதில் மயங்கி விழுந்த அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு முதல்-உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News