செய்திகள்

மேல்மலையனூர் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - போலீசார் விசாரணை

Published On 2019-02-17 06:00 GMT   |   Update On 2019-02-17 06:00 GMT
மேல்மலையனூர் அருகே 3-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல்மலையனூர்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேல்பட்டு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம்வகுப்பு படித்து வருகிறாள்.

அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் டியூசன் சென்டர் நடத்தி வந்தனர். அந்த டியூசன் சென்டரில் 3-ம் வகுப்பு மாணவி டியூசன் படித்து வந்தாள். சம்பவத்தன்று அந்த மாணவி டியூசன் சென்றாள். டியூசன் முடிந்து அவள் வீட்டுக்கு வந்தாள்.

வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை. இதை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் நைசாக வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அவர் கதவை பூட்டிக்கொண்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு சென்றுவிட்டார். அந்த சிறுமி வீட்டுக்கு வந்த தனது பெற்றோரிடம் அழுதுகொண்டு நடந்த விவரத்தை கூறினாள். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த மாணவி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

இந்த சம்பவம் தொடர்பாக அவலூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News