செய்திகள்

திருப்பத்தூரில் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர் தற்கொலை

Published On 2019-02-13 09:49 GMT   |   Update On 2019-02-13 09:49 GMT
திருப்பத்தூரில் அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகன் குமார் (வயது 42). இவர் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவ மனையில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குமார் மருத்துவ விடுப்பில் சென்றார். விடு முறை முடிந்து நேற்று அவர் பணிக்கு திரும்பினார்.

பணியில் சேர்ந்ததும் மனைவியிடம் பேசிய அவர் சிவகங்கை சென்று விட்டு வருவதாக கூறியுள்ளார். ஆனால் இரவில் அவர் வீட்டிற்கு வரவில்லை.

இந்த நிலையில் இன்று காலை கால்நடை ஆஸ்பத்தி ரியை ஊழியர் திறந்தபோது அங்கு குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து திருப்பத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக குமார் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
Tags:    

Similar News