செய்திகள்
ஜெயந்தி மற்றும் சாந்தி.

வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2019-02-11 03:21 GMT   |   Update On 2019-02-11 03:21 GMT
வண்ணாரப்பேட்டைக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படுவதால் வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையுமா? என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. #MetroTrain
சென்னை:

வடசென்னையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம். தற்போது வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் வந்திருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

மெட்ரோ ரெயில் பயணிகள் கூறியதாவது:-

ஜெயந்தி (திருமங்கலம்):-

சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-வது அடுக்கு தரை தளத்தில் இருந்து சுமார் 100 அடி ஆழத்தில் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து பயணத்தை தொடங்கும் போது திகில் அனுபவமாக உள்ளது. அதேபோன்று சென்டிரல் ரெயில் நிலையம்- அரசினர் தோட்டம் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கூவம் ஆற்றுக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் ரெயில் கடந்து செல்லும் போது பயணிகளுக்கு திகில் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. பாமர மக்களும் பயணம் செய்யும் வகையில் கட்டணத்தை சற்று குறைப்பது குறித்து ஆலோசிக்கலாம்.

சாந்தி(சென்னை):-

வடசென்னையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம். தற்போது வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் வந்திருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் உள்ள வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், தண்டையார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுவது ஒரு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

சுமதி(வண்ணாரப்பேட்டை):-

வடசென்னையில் உள்ள மின்சார ரெயில் நிலையங்களில் எத்தனை வசதிகள் செய்து தரப்பட்டாலும், சமூக விரோதிகளின் கூடாரமாகத்தான் பெரும்பாலான ரெயில் நிலையங்கள் காட்சி அளிக்கின்றன. எனவே சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பெண்கள் பயமின்றி பயணம் செய்ய கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.

ஜோஸ்பின்(வியாசர்பாடி):-

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது முன்னோர் வாக்கு, ஆனால் சென்னையை பொறுத்தவரையில் தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது என்ற அளவில் தான் இருக்கிறது. குறிப்பாக வடசென்னையில் அடிப்படை வசதிகள், போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் ஓடியதை வரவேற்கிறோம். இனிமையான பயணமாக இருந்தது. நேரம் மிச்சம் மற்றும் மாசு இல்லாத பயணமாக இருந்தது. #MetroTrain

Tags:    

Similar News