செய்திகள்
கிழக்கு தாம்பரத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் வீட்டில் நகை கொள்ளை
கிழக்கு தாம்பரத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:
கிழக்கு தாம்பரம் திரவஞ்சேரி ஸ்ரீரடி சாய்நகரில் வசிப்பவர் மனோஜ். ஓய்வு பெற்ற விமான படை ஊழியர்.
இவர் நேற்று காலை குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவின் லாக்கர் உடைக்கப் பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்தார்.