செய்திகள்

மண்ணச்சநல்லூர் - கீரனூரில் இளம்பெண்- கேபிள் ஆபரேட்டர் தற்கொலை

Published On 2019-02-08 14:28 GMT   |   Update On 2019-02-08 14:28 GMT
மண்ணச்சநல்லூர் மற்றும் கீரனூரில் பல்வேறு சம்பவங்களில் இளம்பெண்- கேபிள் ஆபரேட்டர் தற்கொலை செய்து கொண்டனர்.
மண்ணச்சநல்லூர்:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தெற்கு ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் சித்ரா (வயது 27). இவருக்கும்  ஓமந்தூர் கீழப்பட்டியை சேர்ந்த மனோகர் என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. 

இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். சித்ரா, தெற்கு ஈச்சம்பட்டியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 2-ந்தேதி திடீரென எலி மருந்தை தின்று விட்டார். 

உயிருக்கு போராடிய அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சித்ரா இறந்தார்.

இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள வாழமங்களத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 27). கீரனூரில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. 

இதனால் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து தற் கொலை செய்து கொண்டார். இது குறித்து கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News