செய்திகள்

அன்னூர் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த வட மாநில வாலிபர் பலி

Published On 2019-02-08 17:43 IST   |   Update On 2019-02-08 17:43:00 IST
அன்னூர் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த வட மாநில வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சுனில்ராம் (வயது 35). இவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பாரதி நகரில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்தார். அறைக்கு திரும்பிய அவர் திடீரென வாந்தி எடுத்தார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News