செய்திகள்
ஈரோடு அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
ஈரோடு அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள வெள்ளோட்டை சேர்ந்தவர் லோகு சாமி (வயது 48) இவர் ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் டிரைவராக பணி புரிந்தார்.
இவரது மனைவி பெயர் ராதா மணி (35) இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை.
இதனால் மன வேதனையில் இருந்த லோகு சாமி வீட்டில் விஷம் குடித்து விட்டார் உடனடியாக அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார் இது குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.