செய்திகள்

நிலக்கோட்டை அருகே துக்க வீட்டுக்கு வந்தவர் மாரடைப்பால் மரணம்

Published On 2019-02-04 16:37 GMT   |   Update On 2019-02-04 16:37 GMT
நிலக்கோட்டை அருகே துக்க வீட்டுக்கு வந்தவர் மாரடைப்பால் இறந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள முத்துகாமன் பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ஆனந்தகிருஷ்ணன் (வயது 22). இவர் சம்பவத்தன்று துரைசாமிபுரம் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்த போது கார் மோதி தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த பஸ் அவர் தலையில் ஏறி நசுக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு டாஸ்மாக் கடையை அகற்றுமாறு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனந்தகிருஷ்ணன் உடல் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மல்லையாபுரத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் ராமசாமி (29) வந்தார். அவர் ஆனந்தகிருஷ்ணன் உடலை பார்த்து கதறி அழுது கொண்டு இருந்தபோதே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் மேலும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Tags:    

Similar News