செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன் பேசினார்.
இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கட்சியின் மாவட்ட பொருளாளர் அன்பழகன், துணை செயலாளர் தங்க.பிச்சைமுத்து, இலக்கிய அணி செயலாளர் சிவசுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிவசங்கர், பொய்யூர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன் பேசினார்.
இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கட்சியின் மாவட்ட பொருளாளர் அன்பழகன், துணை செயலாளர் தங்க.பிச்சைமுத்து, இலக்கிய அணி செயலாளர் சிவசுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிவசங்கர், பொய்யூர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.