செய்திகள்

அரசின் நிதிநிலை தொடர்பான விவகாரத்தில் தலையிட முடியாது- மதுரை ஐகோர்ட் கருத்து

Published On 2019-01-28 11:51 GMT   |   Update On 2019-01-28 11:51 GMT
அரசின் நிதிநிலை தொடர்பான விவகாரத்தில் தலையிட முடியாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். #JactoGeo #MaduraiHCBench
மதுரை:

ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி லோகநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்தால் மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பொது நல மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே ‘‘21 மாத நிலுவைத்தொகை வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ ஜாக்டோ- ஜியோ சார்பில் புதிய கோரிக்கை முன் வைக்கப்பட்டது.


அப்போது ‘‘அரசின் நிதிநிலை தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்ட ரீதியாக அணுகாமல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வீதியில் இறங்கி போராடுகிறீர்கள். நீங்கள் தற்போது குறிப்பிட்டுள்ள விவகாரம் தொடர்பாக புதிதாக உத்தரவு ஏதும் பிறக்க முடியாது’’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கை பிப்ரவரி 18-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். #JactoGeo #MaduraiHCBench
Tags:    

Similar News