செய்திகள்

எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் - கைக்குழந்தைகளுடன் மனு கொடுக்க வந்த பெண்கள்

Published On 2019-01-28 11:42 GMT   |   Update On 2019-01-28 11:42 GMT
சித்தோடு கோணம் வாய்க்கால் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் என கைக்குழந்தைகளுடன் பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஈரோடு:

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது .கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

பவானி தாலுகா மயிலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்களது குழந்தைகளுடன் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சித்தோடு கோணம் வாய்க்கால் பிரிவு பகுதியில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் கடை தற்போது பவானி மயிலம்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட போத்த நாயக்கன் புத்தூரில் நெடுஞ்சாலை ஓரம் உள்ள பகுதியில் அமைய உள்ளது.

போத்த நாயகன் புத்தூர் சுற்றி சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறோம் மேலும் இப்பகுதியில் கல்வாநாயக்கனூரில் தொடக்கப்பள்ளியும் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இயங்கி வருகிறது.

இதனால் இந்த பகுதியில் எப்போதும் பெண்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

எனவே மேற்படி இடத்தில் டாஸ்மாக்கடை வந்தால் இந்த பகுதி நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் மேலும் கல்லூரி பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அச்சத்துடனேயே பள்ளிக்கு செல்லும் சூழ்நிலை உருவாகும். எனவே இந்த பகுதிக்கு வர இருக்கும் டாஸ்மாக் கடையை வேறு ஒரு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர் அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News