செய்திகள்
சின்னமனூர் அருகே அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் பலி
சின்னமனூர் அருகே அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் பலியானான்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் சீலையம்பட்டி அருகில் உள்ள வேப்பம்பட்டியை சேர்ந்த குணசேகரன் மகன் ராமு (வயது10). இவன் அங்குள்ள ஊராட்சி தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று சீலையம்பட்டி செல்லும் சாலையில் தனது நண்பருடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த மணல் லாரி மாணவனின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.
இதுகுறித்து குணசேகரன், ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் லாரியை ஓட்டி வந்த ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் சீலையம்பட்டி அருகில் உள்ள வேப்பம்பட்டியை சேர்ந்த குணசேகரன் மகன் ராமு (வயது10). இவன் அங்குள்ள ஊராட்சி தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று சீலையம்பட்டி செல்லும் சாலையில் தனது நண்பருடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த மணல் லாரி மாணவனின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.
இதுகுறித்து குணசேகரன், ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் லாரியை ஓட்டி வந்த ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரை கைது செய்தனர்.