செய்திகள்

செங்குன்றம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு

Published On 2019-01-24 11:02 GMT   |   Update On 2019-01-24 11:02 GMT
செங்குன்றம் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
செங்குன்றம்:

செங்குன்றம் அருகே பழைய அலமாதி பகுதியில் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து மதில் சுவர் மற்றும் ஓட்டு வீடு கட்டி இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க உத்தரவிட்டது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் புகழேந்தி, சோழவரம் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் இன்று ஜே.சி.பி. எந்திரம் மூலம் மதில் சுவர், வீட்டை அகற்றி ரூ.10 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டனர்.

அரசு நிலத்தை மீட்கும் பணியின்போது சோழவரம் போலீசார் பாதுகாப்பு அளித்தனர். #tamilnews
Tags:    

Similar News