செய்திகள்

தருமபுரி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2019-01-23 15:21 GMT   |   Update On 2019-01-23 15:21 GMT
தருமபுரி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த நெருப்பூர் அருகே உள்ள குறுகாவியனூரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுமதி (வயது 42). 

இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் வழக்குபதிவு செய்து சுமதி குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News