செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ரூ.13.5 கோடிக்கு மது விற்பனை

Published On 2019-01-18 16:16 GMT   |   Update On 2019-01-18 16:16 GMT
நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.13.5 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது வழக்கமான விற்பனையை விட 2 மடங்கு அதிகமாகும்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 188 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்தது. 

குடிமகன்கள் ஆர்வத்துடன் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் பீர், பிராந்தி, ரம் உள்ளிட்ட மதுபானங்கள் ரூ.13.5 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. இது வழக்கமான விற்பனையை விட 2 மடங்கு அதிகமாகும். 

இதில் பீர் 16 ஆயிரத்து 400 பெட்டிகளும், பிராந்தி, ரம் உள்ளிட்டவைகள் 21 ஆயிரம் பெட்டிகளும் விற்பனையானது. 
Tags:    

Similar News