செய்திகள்

கேரளாவிற்கு கடத்த முயன்ற 163 ரேசன் அரிசி மூடை, லாரி பறிமுதல்- டிரைவரிடம் விசாரணை

Published On 2019-01-17 13:05 GMT   |   Update On 2019-01-17 13:05 GMT
புளியரை வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 163 ரேசன் அரிசி மூடையை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கோட்டை:

தமிழகத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு கனிம பொருட்கள், ரேஷன்  அரிசி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் அதிகளவு கடத்தப்பட்டு வருவதை தடுக்கும் நடவடிக்கையில் புளியரை சோதனை சாவடியில் 24 நேரமும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடத்தல் பொருட்கள் தடுக்கப்படுவதுடன், கடத்தலில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் புளியரை சோதனை சாவடியில் போலீசார் ஒரு லாரியை இன்று சோதனை நடத்தினர். சோதனையில் பாவூர்சத்திரம் பகுதியிலிருந்து 163 மூடை ரேசன் அரிசியை திருவனந்தபுரம் பகுதிகளுக்கு எடுத்து செல்ல கொண்டு சென்றது தெரியவந்தது.  

இதையடுத்து 163 மூடை ரேசன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் குற்ற புலனாய்வு துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் லாரியை ஓட்டி வந்த கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த சுகைபு (வயது 35) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News