செய்திகள்

பட்டீஸ்வரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-01-07 11:11 GMT   |   Update On 2019-01-07 11:11 GMT
பட்டீஸ்வரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அருகே மாடாகுடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி சந்தியா (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சந்தியா , சென்னையில் தங்கியிருந்து வீட்டு வேலை செய்து வந்தார். இதனால் குழந்தைகளை உறவினர் கோபால கிருஷ்ணன் என்பவர் கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா ஊருக்கு திரும்பினார்.

அப்போது குழந்தைகள் 2 பேரும், சந்தியாவிடம் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தியா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சந்தியா கயிற்றால் தூக்குப் போட்டார். இதை பார்த்த அவரது உறவினர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் பற்றி பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News