செய்திகள்

திருவாரூரில் 3 கடைகள் தீப்பிடித்து எரிந்து ரூ.10 லட்சம் சேதம்

Published On 2018-12-31 10:31 GMT   |   Update On 2018-12-31 10:31 GMT
திருவாரூர் பழைய ரெயில் நிலையம் அருகே 3 கடைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
திரூவாரூர்:

திருவாரூர் பழைய ரெயில் நிலையம் அருகே உள்ள வி.ஆர்.எம் சாலை வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும்.

இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பேக்கரி கடையில் மின் கசிவு காரணமாக தீ பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் தீ விபத்தை தடுக்க முயற்சி மேற்கொண்டனர். அருகில் இருந்தவர்களும் தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் தீ மளமளவென பிடித்து அருகிலிருந்த தையற்கடை, செருப்புக் கடைகளுக்கும் பரவியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் திருவாரூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தின் போது பேக்கரி கடையில் இருந்த கேஸ் சிலிண்டர் உடனடியாக அகற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக பேக்கரி, தையற்கடை, செருப்புக்கடை ஆகியவற்றிலுள்ள ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

இந்த விபத்து குறித்து திருவாரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News