செய்திகள்

உயர்மின்பாதை அமைக்க எதிர்ப்பு - 13 நாட்களாக விவசாயிகள் நடத்திய போராட்டம் தற்காலிக வாபஸ்

Published On 2018-12-30 12:27 GMT   |   Update On 2018-12-30 12:27 GMT
உயர்மின்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 13 நாட்களாக நடத்தி வந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். #Powerlines #FarmersProtest
சென்னை:

தமிழகத்தில் விவசாய விளைநிலங்களின் வழியாக உயர் மின்கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மாவட்ட விவசாயிகள் கடந்த 17-ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
 
கேரளாவில் உள்ளதைபோல் சாலையோரம் கேபிள் மூலம் தமிழகத்தில் மின்சாரப் பாதை அமைத்து கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. கோவையில் சுல்தான்பேட்டையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கள்ளிப்பாளையத்திலும் போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே கடந்த 23-ம் தேதி முதல் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி, விஸ்வநாதன், பச்சியப்பன், பால்ராஜ், சிவக்குமார், நாச்சிமுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட விவசாயிகள் 16 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இந்நிலையில், உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டத்தை இன்று தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். 

திருப்பூர், ஈரோடு, கோவையில் 13 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜனவரி 3-ம் தேதி முதல் சென்னையில் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். #Powerlines #FarmersProtest
Tags:    

Similar News