செய்திகள்

சசிகலாவை ஜெயலலிதா ஆன்மா சிறையில் பிடித்து தள்ளிவிட்டது- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

Published On 2018-12-21 04:28 GMT   |   Update On 2018-12-21 04:28 GMT
ஆட்சியை பிடிக்க நினைத்த சசிகலாவை ஜெயலலிதா ஆன்மா சிறையில் பிடித்து தள்ளிவிட்டது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார். #Jayalalithaa #Sasikala #MRVijayabaskar
கரூர்:

கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணையும் விழா தளவாபாளையத்தில் நடந்தது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த அமாவாசைக்குள், அடுத்த அமாவாசைக்குள் அ.தி.மு.க. ஆட்சி கலைந்து விடும் என்றவர்களின் கனவை பொய்யாக்கி கடுமையான விமர்சனங்களையும் கடந்து இந்த ஆட்சி தொடர்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாரிசு யாரும் இல்லை. அதனால் அவருக்கு சொத்து சேர்க்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஆனால் அவருடன் இருந்த மன்னார்குடி கும்பல் சொத்துக்களை வாரி சுருட்டியது. இதனால் ஜெயலலிதா சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.


ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களை அவரது ஆன்மா சும்மா விடாது. அவர் இறந்த உடன் மும்பையில் இருந்து மேக்கப் கலைஞர்களை வரவழைத்து ஜெயலலிதா போல் கொண்டை போட்டு, கழுத்து வரை ஜாக்கெட் போட்டு சசிகலா ஆட்சியை பிடிக்க நினைத்தார்.

ஆனால் ஜெயலலிதா ஆன்மா அவரை பிடித்து பெங்களூர் சிறையில் போட்டு விட்டது. எனவே ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் எந்த கட்சிக்கு சென்றாலும் அவர்களையும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #Sasikala #MRVijayabaskar
Tags:    

Similar News