செய்திகள்
பழனி அருகே மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
பழனி அருகே மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பழனி:
பழனி முல்லைநகரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது45). இவர் கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவிகளிடம் ஆபாசமாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பழனி சட்டப்பணிகள் குழுவிற்கு புகார் அனுப்பப்பட்டது. இதனைதொடர்ந்து சட்டப்பணிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
ஆசிரியர் ஸ்டீபன்ராஜ் மற்றும் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரித்தனர். விசாரணையில் ஸ்டீபன்ராஜ் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் பழனி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.