செய்திகள்

சுங்குவார்சத்திரம் அருகே லாரி மோதிய விபத்தில் மாணவி பலி

Published On 2018-12-20 08:15 GMT   |   Update On 2018-12-20 08:15 GMT
சுங்குவார்சத்திரம் அருகே லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள கோவளம்மேடு மாரியம்மன் கோவிலை சேர்ந்தவர் சேகர் (வயது 35). இவர் கடந்த 15-ந் தேதி மகன்கள் லோகேஷ் (13), காமேஸ்வரன் ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்றார்.

அப்போது அவ்வழியே நடந்து சென்ற உறவினர் மகள் தனலட்சுமியை (11) மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார். குண்ணம் அருகே வந்தபோது வேகமாக வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் சேகர், அவரது மகன் லோகேஷ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தனலட்சுமிக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக இறந்தார். அவர் அருகில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News