செய்திகள்

காரமடை அருகே குடும்ப தகராறில் நர்ஸ் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-12-18 10:34 GMT   |   Update On 2018-12-18 10:34 GMT
கோவை மாவட்டம் காரமடை அருகே குடும்ப தகராறில் நர்ஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரி குடியிருப்பை சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி வித்யா (வயது 26). இவர் காரமடை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

சம்பவத்தன்று வித்யாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த வித்யா வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரமடையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திவ்யா கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று திவ்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாக 1½ வருடத்தில் திவ்யா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News