செய்திகள்

காஞ்சீபுரம் அருகே போலீசால் தாக்கப்பட்ட வாலிபர் மரணம்

Published On 2018-12-17 10:15 GMT   |   Update On 2018-12-17 10:15 GMT
காஞ்சீபுரம் அருகே போலீசால் தாக்கப்பட்ட வாலிபர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

காஞ்சீபுரம் அருகே உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் மாணிக்கம் (வயது 22).

கடந்த 29-ந் தேதி மாணிக்கம் காஞ்சீபுரம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது அருகே இருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து விஷ்ணு காஞ்சி போலீசார் மாணிக்கத்தை விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணையின்போது திடீரென மாணிக்கம் மயங்கி சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அவரை சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் தாக்கியதில் மாணிக்கம் உயிர் இழந்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News