செய்திகள்

ஆம்பூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை

Published On 2018-12-16 20:36 IST   |   Update On 2018-12-16 20:36:00 IST
ஆம்பூர் அருகே மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆம்பூர்:

ஆம்பூர் தேவலாபுரம் அடுத்த எல்மாங்குப்பத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது42) எலக்ட்ரீசியன். இவரது மனைவி உஷாராணி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தயாளன் மேல் கிருஷ்ணாபுரத்தில் வாடகை வீட்டில் தனது குடும்பத்தோடு வசித்து வந்தார்.

தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே மனமுடைந்த உஷாராணி கே.ஜி.எப்.பில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் தயாளன் வீட்டில் இருந்து கடந்த 2 நாட்களாக துர்நாற்றம் வீசி வந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் ராமமூர்த்தி சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்ட பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தயாளன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து உடலை மீட்ட போலீசார் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் தயாளன் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News