செய்திகள்

ஆத்தூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தற்கொலை

Published On 2018-12-11 11:06 GMT   |   Update On 2018-12-11 11:06 GMT
ஆத்தூர் அருகே மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள சித்தையன்கோட்டை சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ராஜசேகர் (வயது25). தச்சு தொழிலாளி. இவருக்கும் திருப்பூரை சேர்ந்த உமாமகேஸ்வரிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த ஒரு மாத்திற்குள்ளேயே கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் கடந்த சில நாட்களாக மனைவி உமாமகேஸ்வரி அவரது தந்தை வீட்டில் வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக மனமுடைந்த புதுமாப்பிள்ளை ராஜசேகர் மிகுந்த வருத்தத்துடன் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராஜசேகர் மிகுந்த வேதனையுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News