செய்திகள்

திருமணமான 10 மாதத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-12-10 09:35 GMT   |   Update On 2018-12-10 09:35 GMT
தாம்பரம் அருகே திருமணமான 10 மாதத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

குரோம்பேட்டை கணபதிபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் மறைமலை நகரில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருக்கிறார். இவரது மனைவி சவுமியா (31). கிண்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நிர்வாக மேலாளராக பணிபுரிகிறார்.

இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதில் இருந்தே இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. நேற்று இரவு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சவுமியா வீட்டின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிட்லபாக்கம் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்கள். திருமணமாகி 10 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது. #tamilnews
Tags:    

Similar News