செய்திகள்

மதுரை அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை

Published On 2018-12-08 17:47 IST   |   Update On 2018-12-08 17:47:00 IST
மதுரை அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை:

மதுரை அருகே உள்ள பரவை கள்ளிக்குடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சத்தியமூர்த்தி (38). இவர் தனது மனைவியுடன் சிக்கந்தர்சாவடி அழகர்நகர் பகுதியில் வசித்து வந்தார்.

அப்போது கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சத்தியமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அலங்காநல்லூர் போலீசில் அவரது தாய் வேடச்சி புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News