செய்திகள்
தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து கணவர் மாயம்- மனைவி போலீசில் புகார்
வியாசர்பாடி அருகே தற்கொலை செய்து கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்து சென்ற கணவனை மீட்டு தர கோரி மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெரம்பூர்:
வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்தவர் இம்ஜியாஸ். இவருடைய மனைவி ஆயிஷா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்த இம்ஜியாஸ் சில மாதங்களாக பணம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் ஊர் திரும்பிய இம்ஜியாசுக்கும் அவருடைய மனைவி ஆயிஷாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இம்ஜியாஸ், ‘நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. என்னை மன்னித்துவிடு. இனி வரமாட்டேன். இறந்து விடுவேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்று விட்டார்.
இதுகுறித்து வியாசர்பாடி போலீசில் ஆயிஷா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இம்ஜியாசை தேடி வருகிறார்கள். #tamilnews
வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்தவர் இம்ஜியாஸ். இவருடைய மனைவி ஆயிஷா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்த இம்ஜியாஸ் சில மாதங்களாக பணம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் ஊர் திரும்பிய இம்ஜியாசுக்கும் அவருடைய மனைவி ஆயிஷாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இம்ஜியாஸ், ‘நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. என்னை மன்னித்துவிடு. இனி வரமாட்டேன். இறந்து விடுவேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்று விட்டார்.
இதுகுறித்து வியாசர்பாடி போலீசில் ஆயிஷா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இம்ஜியாசை தேடி வருகிறார்கள். #tamilnews