செய்திகள்

மேகதாது விவகாரம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

Published On 2018-12-06 14:21 GMT   |   Update On 2018-12-06 14:21 GMT
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சிறப்பு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #MekedatuDam #PMModi #EdappadiPalaniswami
சென்னை:

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளித்தன.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.



அந்த கடிதத்தில், தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சிறப்பு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமருக்கு அனுப்பப்பட்டது. #MekedatuDam #PMModi #EdappadiPalaniswami 
Tags:    

Similar News