செய்திகள்

வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை- திருமண ஏற்பாடு பிடிக்காததால் விபரீத முடிவு

Published On 2018-12-06 12:02 GMT   |   Update On 2018-12-06 12:02 GMT
வாடிப்பட்டி அருகே வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்தது பிடிக்காததால், வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாடிப்பட்டி:

மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம். செங்கல் சூளை அதிபர். இவரது மகன் ரியாத் அகமது (வயது 20).

இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ரியாத் அகமது வி‌ஷம் குடித்த நிலையில் காரை ஓட்டிக் கொண்டு வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி பிரிவுக்குச் சென்றார். அங்கு 4 வழிச்சாலையில் காரை நிறுத்திய அவர் திடீரென வாந்தி எடுத்தார்.

இதனை கண்டு அந்த வழியாகச் சென்றவர்கள் அருகில் சென்று பார்த்த போது தான் ரியாத் அகமது வி‌ஷம் அருந்தி இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு நேற்று இரவு ரியாத் அகமது பரிதாபமாக இறந்தார்.

திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் அவர் தற்கொலை செய்திருப்பது போலீசார் தெரியவந்தது.

வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News