செய்திகள்
சிறுவனை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு- சட்டையையும் கழற்றி சென்றனர்
அபிராமபுரத்தில் சிறுவனை மிரட்டி பணம், செல்போன் பறித்த கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை:
சென்னை அபிராமபுரத்தில் இட்லி மாவு கடையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் கார்த்திக் வேலை செய்து வந்தான்.
இவன் கடை உரிமையாளருக்கு உணவு வாங்குவதற்கு மோட்டார்சைக்கிளில் சென்றான். அப்போது 2 வாலிபர்கள் சிறுவனை வழி மறித்தனர்.
அவனை மிரட்டி செல்போனை பறித்த கொள்ளையர்கள் ரூ.300 பணத்தையும் பறித்தனர். அதோடு நிற்காமல் சிறுவன் அணிந்திருந்த சட்டையையும் கொள்ளையர்கள் கழற்ற சொன்னார்கள். பின்னர் அதனையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதுபற்றி சிறுவன் கார்த்திக் அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தான். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்போன்-பணத்துடன் தப்பிய ஓடிய கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
சென்னை அபிராமபுரத்தில் இட்லி மாவு கடையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் கார்த்திக் வேலை செய்து வந்தான்.
இவன் கடை உரிமையாளருக்கு உணவு வாங்குவதற்கு மோட்டார்சைக்கிளில் சென்றான். அப்போது 2 வாலிபர்கள் சிறுவனை வழி மறித்தனர்.
அவனை மிரட்டி செல்போனை பறித்த கொள்ளையர்கள் ரூ.300 பணத்தையும் பறித்தனர். அதோடு நிற்காமல் சிறுவன் அணிந்திருந்த சட்டையையும் கொள்ளையர்கள் கழற்ற சொன்னார்கள். பின்னர் அதனையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதுபற்றி சிறுவன் கார்த்திக் அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தான். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்போன்-பணத்துடன் தப்பிய ஓடிய கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews