செய்திகள்

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வி‌ஷம் குடித்தனர்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2018-12-05 11:54 GMT   |   Update On 2018-12-05 11:54 GMT
கோவையில் குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வி‌ஷம் குடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை வெங்கிடாபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 37). இவர் தடாகம் சாலையில் மெஸ் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி பிரிய தர்ஷினி(32). இவர்களுக்கு ஏஞ்சலின், லீனா, ஹனி என்ற 3 மகள்கள் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த ரவிக்குமார் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அதன்படி நேற்று பிரிய தர்ஷினி, ஏஞ்சலின், லீனா ஆகியோர் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஹனி வீட்டில் இருந்து கதறியபடி வெளியே ஓடினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரவிக்குமார், வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்த மனைவி, குழந்தைகளை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாய்பாபாகாலனி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். இது தொடர்பாக ரவிக்குமாரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News