செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் - தொழிலாளி பலி

Published On 2018-12-04 09:08 GMT   |   Update On 2018-12-04 09:08 GMT
ஊத்துக்கோட்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தொழிலாளி பலியானார்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமம் ஆதி திராவிட காலனி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 24), கூலித் தொழிலாளி. இவரது மனைவி அமராவதி (21), மகன் கவுதம் (3).

மோகன் மனைவி, மகனுடன் மோட்டார் சைக்கிளில் கட்சூருக்கு புறப்பட்டார். வெங்கடாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீர் என்று கட்டுப்பாடு இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஒரமாக உள்ள மின் கம்பத்தில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கட்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையில் அனுமத்தித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார். அவரது மனைவி அமராவதி, மகன் கவுதம் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பென்னாலூர் பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News