செய்திகள்

தூசி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

Published On 2018-11-27 16:00 IST   |   Update On 2018-11-27 16:00:00 IST
தூசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெம்பாக்கம்:

வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் சந்தைமேடு, லெட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வந்தவாசி - காந்திபுரம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

1 மணி நேரத்துக்கு மேல் போராட்டம் நீடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனயாக குடிநீர் கிடைக்க நடவடடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News