செய்திகள்
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும்- வானிலை மையம் அறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்குள் டெல்டா மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain #DeltaDistrict #IMD
சென்னை:
தமிழக கடலோர பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் தரை பகுதிக்குள் நகர்ந்து வலு இழந்தது.
இதனால் உள் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாகவும், சில சமயம் கன மழையும் பெய்து வருகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் டெல்டா மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. #ChennaiRain #DeltaDistrict #IMD
தமிழக கடலோர பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் தரை பகுதிக்குள் நகர்ந்து வலு இழந்தது.
இதனால் உள் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாகவும், சில சமயம் கன மழையும் பெய்து வருகிறது.
வலு இழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலுக்கு சென்று மேலடுக்கு சுழற்சியாக பரவி உள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள குமரி கடல் பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. #ChennaiRain #DeltaDistrict #IMD